Wednesday, July 7, 2010

arasu pallikalil maanavarkal kuraikiraarkal

http://ilavasakkalvi.blogspot.com/2010/07/blog-post.html#comment-form

எழுபதுகளிலிருந்தே புதிய அரசு பள்ளிகள் திறக்காததினாலும் , வேலையின்மை காரணமாக வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் வழக்கம் துவங்கியதாலும் , மெட்ரிக் பள்ளிகள் அதிகமாக் உதயம் ஆகின.
அதே சமயம் 1960 முதலே பள்ளி/கல்லூரிகளில் அரசியல் அதாவது திராவிட கட்சிகளின் தாக்கம் அதிகம் ஆகியது. ஆசிரியர்களின் அரசியல் சார்பு, அதனால் அவர்களை தட்டி கேட்காத கல்வித்துறை அதிகாரிகள், தவிரவும் அகில இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவிய லஞ்ச ஊழல் அரசுமுறை: இவை அனைத்தும் சேர்த்து உள்ள அரசுப் பள்ளிகள் சீரழியத் தொடங்கின. சென்னை, மதுரை முதலிய பெரிய ஊர்களில் அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்று வழி கல்வி ஒரு பிரிவு(செக்ஷன்) என இருந்தது போய் மெட்ரிக் பள்ளிகளில் எல்லா வகுப்புகளிலும் ஆங்கிலமே பயிற்று வழி என ஆகியது. சிறிய ஊர்களில் இருந்து நகரம் நோக்கி மக்கள் குடி பெயர்ந்ததால் மக்கள் தொகை பெருகிய காலம்; புதிய அரசு பள்ளிகள் திறக்கப் படவில்லை. ஆகவே மெட்ரிக் பள்ளிகள் வந்தது காலத்தின் கட்டாயம்.
ஆரம்பக் கல்வி உதவி முதல் அமைச்சரின் கீழ் வர வேண்டும். ஸ்டாலின் ஒருவரே நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய முடியும்.

No comments:

Post a Comment