Friday, February 17, 2012



imarisanam.wordpress.com/author/vimarisanam/  18 feb 2012

இருபத்தொன்பது வங்கிகள் நாட்டுடைமை; இப்போது  அவற்றில் மூன்று இல்லை; அதாவது இருபத்து ஐந்து.

நாட்டுடைமை ஆகுமுன்னர் சிறு தொழில்களுக்கு, சிறு வணிக முயற்சிகளுக்கு, விவசாயத்துக்கு எவ்வளவு சதவீதம் கடன் அளிக்கப்பட்டது?  சொத்து அடமானம் அல்லது மூன்றாம் நபர் கேரண்டீ இல்லாது எத்தனை ஆயிரம் கோடிகள் கடன்கள் வழங்கப்பட்டன? அந்த மாதிரி திட்டங்கள் இல்லாமல் இருந்தால் எவ்வளவு    நிலங்களில் 
 கிணறு  தோண்ட, பம்பு செட்டு வைக்க, டிராக்டர் வாங்க; முடிந்திருக்கும்? டீக்கடையிலிருந்து ஆட்டோ வாங்குவது வரை எத்துணை சாதாரண நபர்கள் இப்போது நடுத்தரத்திற்கு உயர்ந்து இருக்கின்றனர்?  நூறு சதவீதம் அரசு நிறுவனமாக இருந்தபோதும் அரசு அலுவலகம் போன்ற கெடுபிடிகள், விதிமுறையின் படி வேலை, காலந்தவறாமை (punctuality ).  அரசு வங்கியில் நுழையும் போது தாலுகா அலுவலகம் அல்லது பதிவு அலுவலகம் போன்ற எண்ணம் வருகிறதா? சுற்றி உள்ள எல்லா அலுவலகங்களும் "அரசு சின்னத்தை" தாங்கி நிற்கும் பொது, மிக நல்ல வழியில் தம் பணியை செய்தன  ; செய்து   கொண்டு இருக்கின்றன அரசு வங்கிகள்.  

விஜய் மல்லையாவுக்கு வருவோம். வங்கிகள் கடன் வழங்கியது கிங் பிஷர் என்ற விமான நிறுவனத்துக்கு.  அந்த நிறுவனம் அளித்த வணிக திட்டம் லாபகரமானதாகத் தோன்றியதால் கடன் வழங்கப்பட்டது.  மல்லையாவின் சொந்த விருப்பு, வெறுப்புகள், அவர் பழக்க வழக்கங்கள், (அவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பெக் அருந்துகிறார்  என்று பார்த்து அல்ல).  நிறுவனத்துக்கு கொடுக்கும் கடனும், தனி நபருக்கு தரப்படும் கடனும் ஒன்றல்ல.   வீட்டுக் கடன் வழங்கும் போது, கடன் வாங்குபவர் எவ்வளவு சம்பளம் அல்லது வருமானம் உள்ளவர் என்று பார்த்து கடன் வழங்கப்படுகிறது, எவ்வளவு சேமிக்க முடிந்தவர் என்று, எவ்வளவு உண்மையில் ஊதாரித்தனமாகச் செலவிடுகிறார் என்று அல்ல.   

நிறுவனத்தின் பணம், தனி நபர் கணக்கு=வழக்கு இரண்டும் தனிதனி.  ஆடிடர்கள் இதைத் தான் தணிக்கை செய்து, நிறுவனப் பணம் சொந்த செலவுகளுக்கு  செலவு செய்யப் படாமல் இருக்கிறதா என்று பார்ப்பது தணிக்கை.  சத்யம் / ராமலிங்க ராஜு நினைவுக்கு வரலாம்.   இது போன்ற நிகழ்வுகளில்   வங்கிகளை குறை சொல்கிறோம், அந்த நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தணிக்கையாளர்கள்  என்ன செய்தார்கள்/ செய்யத் தவறினார்கள்  என்று சுட்டிக்காட்டுவதில்லை.  

வங்கிகளைப் பற்றி மேலெழுந்தவாரியாக இந்த வலையில் எழுதவேண்டாம். பிற விஷயங்களில்   மிகவும் அலசி ஆராய்ந்தும்   எழுதும் தாங்கள் இது போன்ற கருத்துக்களைச்  சொல்லி தவறான எண்ண ஓட்டம் பரவ ஏது செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment