Saturday, August 7, 2010

pinnoottam 7 august 2010

http://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post_14.html

நீங்கள் சொன்ன செய்திகளில் பல அதிகம் கேள்விப்பட்டிராதவை. நன்றி.
ஆனால் ஒன்று: குர்ஆனில் 'ஜிஹாத்' குறித்து தீர்ந்த கருத்துக்கள் உள்ளன; வேற்று மத நபரைக் காயப் படுத்தினால் அது பாவம் அல்ல; இறைவனை (அல்லாவை) நம்பாமல் நரகத்துக்கு போகும் உயிரை காப்பாற்றி, அவர்களுக்கு அல்லாவின் உயர்வைப் போதித்து, அவர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு நல்லவர்களாக மாற்ற அவர்களை கத்தி முனையிலும் கொடுமைப் படுத்தலாம்; அது "ஹராம்" இல்லை என சொல்லி இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன். அல்லாஉதீன், கஜினி போன்றோர் நிலைத்து ஆட்சி செய்யவில்லை; பாபர், அக்பர் காலங்களில் அரசு விரிவு படுத்தப் பட்டது; அவுரங்கசீப் காலத்தில் ஓரளவு கால் ஊன்றியவுடன், ஜிசியா இஸ்லாம் மதம் அல்லாதவர்கள் மீது வரி விதிக்கப் பட்டது. அவ்வரி செலுத்த முடியாதவர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள்.
எனவே, முகலாயர் காலத்தில் மத மாற்றம் ஒரு குறிக்கோளாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
உலகத்தில், நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள், அவற்றில் வாழ்வு முறைகள், மொழிகள், இனங்கள், அரசு முறைகள் முதலியன வெவ்வேறானவை; பொருளாதாரக் காரங்களுக்காக அவை ஒன்றை ஒன்று சார்ந்து இருத்தல் இன்றி அமையாதது என புரிதல் உள்ள கால கட்டத்தில், "ஜிஹாத்" என்று சொல்லிக் கொண்டு, இந்தியா வரும் லஷ்கர்-இ-தொய்பா, முதலியவை கால் ஊன்றியதையும், அவை பெற்று வரும் ஆதரவையும் பார்க்கும் போது ஐந்து நூற்றாண்டு காலத்துக்கு முன்னர், மன்னர்கள் படையெடுப்புக்கு மத மாற்றமும் ஒரு காரணம் என்றால் நம்பக்கூடியதே

3 comments:

  1. ஐயா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கியதன் விளைவு தான் "ஜிகாத்" பற்றிய உங்கள் அபிப்ராயம். அதுவும் "கேள்விபடுகிறேன்" என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் உங்களுக்கு ஜிகாத் மற்றும் திருக்குரான் பற்றிய தவறான தகவல்கள் தான் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. குரான் தமிழில் இருக்கிறது படித்து பாருங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள நேரிடலாம். மேலும் அறிய எனது பழைய பதிவை இங்கே சென்று பாருங்கள். உங்களுக்கு ஜிகாத் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம். http://meiyeluthu.blogspot.com/2009/01/blog-post.html

    அடுத்து நாம் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி ஆராய( சிவசுப்பிரமணியன் போல) வேண்டும். அப்படியே முஸ்லிம் மன்னர்கள் வாள்முனையில் மதம் மாற்றியிருந்தால் அது இஸ்லாத்திற்கு எதிரானதே.

    பாபர் தன் நோயுற்ற கடைசி காலங்களில் தன் மகன் ஹுமாயுனிடம் " நீ முஸ்லிமல்லாத மக்கள் நிரம்பிய ஒரு தேசத்தை ஆளப்போகிறாய். அவர்கள் பசுவை தெய்வமாக வழிபடுகின்றனர், உன் மார்க்கத்தில் பசுவை பலியிடுவது தவறு இல்லையென்றாலும் அவர்களின் மனதை புண்படுத்தாமலிருக்க நீ பசுவை பலியிடுவதை தடுத்துக்கொள்வது நல்லது" என்கிற ரீதியில் அறிவுரை சொன்னதாக பாபரின் சுயசரிதையான "பாபர் நாமா" இருக்கிறதாக படிக்கிறோம். அது இன்னளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரா ராமர் கோவிலை இடித்திருப்பார் என்ற ஐயம் ஏற்படுகிறது.

    அடுத்து ஜிஸ்யா வரி பற்றிய உங்களது புரிதலும் பிழைதான். மொகல் மன்னர்களில் அவுரங்கசீப் ஓரளவு முஸ்லிமாக வாழ்ந்தவர் என்றும் எளிமையான வாழ்வும் கிட்டத்தட்ட இந்தியாவியே ஆண்ட மிகப் பெரிய சக்ரவர்த்தியாக இருந்த போதும் தன் உழைப்பால் உண்டவர் என்பது வரலாற்றுப்பக்கங்களில் காணலாம். அவர் பல கோயில்களூக்கு மானியம் வழங்கியுள்ளார் என்பது கோயில் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இந்த தகவல் எல்லாம் இணையத்தில் கிடைக்கிறது.

    ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்திருந்தால், முஸ்லிம்களை விட இந்துக்கள் நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் எவ்வாறு வாழ முடியும்? என பாபு நாகேந்திரநாத் பானர்ஜி என்ற வரலாற்றாசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஒளரங்கசீப்பின் படையில் தலைமைத் தளபதியாக இருந்தவர் ஒரு இந்து. ஜஸ்வந் சிங், ஜெயசிங் என்ற இரண்டு முக்கிய இந்து தளபதிகள் 2000 முதல் 5000 வரை உள்ள படைகளுக்கு தளபதிகளாக இருந்துள்ளனர். ராஜாவீம் சிங், இந்திரா சிங், அச்சால்ஜி ஆரியால்ஜி போன்றவர்கள் எல்லாம் ஒளரங்கசீப் படையில் தளபதிகளாக இருந்துள்ளனர்.
    நிர்வாகத்தில் கஜானா பாதுகாப்பில், பொருளாதார அமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் இரண்டு இந்துக்கள் இருந்துள்ளனர். சில முஸ்லிம்கள் இதுபற்றி புகார் செய்தபோது, சரியான நபர்களை சரியான பொறுப்புகளில் நியமிக்க எனது மார்க்கம் வழிகாட்டுகிறது என்று ஒளரங்கசீப் பதில் கூறியுள்ளார்.

    மேலும் ஜஸ்வந்தர் சிங், ராஜா ரூப், கபீர் சிங், பிரேம் சிங், திலீப்ராய், ராசிகால்ராய் போன்றோர் உயர் அதிகாரிகளாக இருந்துவந்தனர்.ஒளரங்கசீப் ஆட்சிப் பற்றி ஸ்ரீ சர்மா என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது, ''அவர் உண்மையான மதச்சார்பற்றவராக இருந்தார்; அக்பரின் அரசவையிலே 16 இந்துக்கள்தான் உயர் அதிகாரிகளாக இருந்தனர்; ஆனால் ஒளரங்கசீப் ஆட்சியில் 148 இந்துக்கள் உயர் அரசுப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.அலெக்ஸான்டர் காமிங்டன் என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது ''ஒளரங்கசீப் மொத்தம் 52 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அவரது ஆட்சியில் மக்கள் சொந்த விருப்பத்தின்படி தங்கள் மதவழிபாட்டை நடத்திக்கொள்ள சுதந்திரமளித்தார்'' என்று குறிப்பிடுகிறார்.

    'ஜிஸ்யா வரி விதித்து இந்துக்களை கொடுமைப்படுத்தினார்' என்றும் ஒளரங்கசீப் மீது குற்றம்சாட்டுகின்றனர். இந்துக்களில் போருக்கு வராத திடகாத்திரமான ஆண்கள் அதிலும் இளைஞர்கள் மீது மட்டுமே ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்கப்படவில்லை. அதேநேரம், முஸ்லிம்களுக்கு ஜகாத், முஷ்ரி என்று பல்வேறு வரிகள் இருந்துள்ளன. விவசாயம், வருமானம் தொடர்பான வரிகள் இருந்துள்ளன. இந்துக்களுக்கு ஜிஸ்யா வரி மட்டும்தான் இருந்தது என்று ஜிமதலா சர்கார் சொல்கிறார். மேலும், மக்களுக்கு 65 வகையான வரிகளை முற்றிலுமாக நீக்கினார் எனவும் குறிப்பிடுகிறார்.

    நாம் விஷமக் கருத்துக்கள் பரப்பப்படும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து இதுபோன்ற அவதூறுப் பிரச்சாரங்களை தடுத்துநிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. ஜிஸ்யா வரியை வசூலித்ததன் நோக்கமே போரில் கலந்து கொள்ள இயலாத முஸ்லீமல்லாத குடிமக்களின் பாதுகாப்பையும் கருதி தான் என்ற உண்மையை எவரும் மறந்து விடக்கூடாது.

    ஜஸ்யா வரி மூலம் இஸ்லாம் புகுத்தப்பட்டது என்பதும் வரலாற்றைத் திரிப்பதற்கு சமம்.

    ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.


    முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத் ' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.

    முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத் ' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.

    தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும்,

    இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத் ' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும்.

    இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.

    விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது.

    எனவே 'ஜகாத் ' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.

    ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.

    குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?

    ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத் 'தை விதிக்க முடியாது.

    ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.

    ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.

    வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.

    அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?

    எனவேதான் 'ஜிஸ்யா ' வந்தது.

    இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

    திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

    சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?

    சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா ' விதிக்கப்பட்டது.

    தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,

    வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.

    இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.

    சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.

    இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா '.

    இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.

    அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டன.

    அவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.

    T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :

    '"ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல".

    ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.

    ' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

    ReplyDelete
  3. We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete